பரத்தையின் பரிணாமங்கள் சங்கம் முதல் சமகாலம் வரை
சமுக ஒடுக்குமுறையின் முக்கிய செயல்முறைகளுள் முதன்மையானது மனிதன் சக மனிதனை ஒடுக்கி, ஒதுக்கி வைத்து வாழும் முறையாகும். இவ்வரலாற்றுப் போக்கில் ஆணினம் பெண்ணினத்தை வெறுங் கருவிகளாகவும், விலைப் பொருட்களாகவும் பல்வேறு வகையில் ஒடுக்குமுறை செய்து அவற்றினை சமூகக் கட்டமைப்பாய் பலவந்தப்படுத்தி, ஆணாதிக்கம் பல்வேறு வகையான கருத்தினை விதைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இம்முறை பண்டைய காலந் தொட்டு இன்று வரையும் மறக்க முடியாத நிகழ்வாய் மாறி நிற்கிறது. நாகரீக காலந் தொட்டு இன்று வரையும் பெண் சமுதாயத்திற்கான கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதையும் ஆணாதிக்கச் சமுதாயம் அன்று முதல் ஏன் இன்று வரையிலும் கூட வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்துள்ளதையும் வரலாற்றின் வழியிலும் இன்றைய நடைமுறையிலும் நாம் இலக்கியவெளியிலும் யதார்த்தவெளியிலும் காண முடிகிறது. தாய்வழி சமூகத்திற்குப் பின்னர் பெண்கள் பல்வேறு வகையில் சமூக ஒடுக்குமுறைக்குள் ஒருபுறம் சிக்கிக் கிடக்க, அதையும் தாண்டி, ஒடுக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்ட பெண்ணினத்தை இன உற்பத்தி செய்யும் வெறுங்கருவிகளைப் போல பயன்படுத்தி அழிக்கவும் செய்ததை பல்வேறு சான்றுகளின் வழியாக மெய்ப்பிக்க முடியும். பழங்காலத்தில் பெண்கள் சமூக விதிகளாய் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது. குறிப்பாக, தந்தைவழி சமூகம் நிலவுடைமை சமூகமாய் நிலவியிருந்த காலத்தில், பெண்களுக்கென பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய எந்த விதிமுறைக்கும் உட்படாத இலக்கிய இயங்கியல் வெளியில் பரத்தை என்றொரு இனம் இருந்தது என்பதை அறிய முடிகின்றது. இத்தகைய பரத்தையர்சார் வாழ்வியல் பண்டைய காலம் முதல் இன்று வரையில் தன்னை இலக்கியங்களில் எவ்வாறு நகர்த்திச் செல்கின்றது என்பதை இவ்வாய்வு கட்டுரை விலக்குகின்றது.
க., . (2026). பரத்தையின் பரிணாமங்கள் சங்கம் முதல் சமகாலம் வரை. International Journal of Science, Strategic Management and Technology, 02(04). https://doi.org/10.55041/ijsmt.v2i4.353
க., முனைவர்.ஈஸ்வரன். "பரத்தையின் பரிணாமங்கள் சங்கம் முதல் சமகாலம் வரை." International Journal of Science, Strategic Management and Technology, vol. 02, no. 04, 2026, pp. . doi:https://doi.org/10.55041/ijsmt.v2i4.353.
க., முனைவர்.ஈஸ்வரன். "பரத்தையின் பரிணாமங்கள் சங்கம் முதல் சமகாலம் வரை." International Journal of Science, Strategic Management and Technology 02, no. 04 (2026). https://doi.org/https://doi.org/10.55041/ijsmt.v2i4.353.
2.கல்வெட்டுகளில் தேவதாசிகள் - எஸ்.சாந்தினிபீ
3.சங்க இலக்கியத்தொகுதி - கழக வெளியீடு
4.சங்க இலக்கியத்தொகுதி – NCBH
5.தாழப்பறக்காத பரத்தையர் கோடி - பிரபஞ்சன்
6.தேவதாசி முறை காலமும் கருத்தும் - கல்யாணி பிரபாகரன்
7.தேவரடியார் - அ.வெண்ணிலா
8.தொல்காப்பியம் பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை
9.தொல்காப்பியம் - தமிழ்ப் பல்கலைக்கழகம்
10.பத்தினிப் பெண்டீர் அல்லோலம் - கமலாலயன்